முடிவை நோக்கிச் செல்கிறதா FM ரேடியோ சகாப்தம்?
இந்தியாவின் FM ரேடியோத் துறை தொடர்ந்து நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. அதிகரித்து வரும் இழப்புகள், அரசின் ஒழுங்குமுறை கட்டுப்பாடுகள் மற்றும் டிஜிட்டல் தளங்களின் கடுமையான போட்டி காரணமாக, சில தனியார் FM நிறுவனங்கள் தங்களது ஒலிபரப்பு உரிமங்களை அரசிடம் திருப்பி ஒப்படைத்து வருகின்றன.
தனியார் FM நிலையங்களுக்கும் ஆல் இந்தியா ரேடியோவைப் போல செய்தி ஒலிபரப்புக்கு அனுமதி வழங்குவது, ஜிஎஸ்டி குறைப்பது உள்ளிட்ட முக்கிய சீர்திருத்தங்களை உடனடியாக அமல்படுத்தாவிட்டால், எதிர்காலத்தில் மேலும் பல FM வானொலி நிலையங்கள் செயல்பாட்டை நிறுத்தும் அபாயம் இருப்பதாக துறை வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0