"அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும்" – இபிஎஸ்-க்கு எஸ்.பி. வேலுமணி வலியுறுத்தல்
அதிமுகவில் நீண்ட காலமாக உழைத்த நிர்வாகிகளுக்கு உரிய பதவிகள் வழங்கப்படாதது குறித்து, கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.
கட்சியின் ஆரம்ப காலம் முதல் உழைத்த பலருக்கு பதவி வழங்கப்படாமல் இருப்பதோடு, சிலர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், கட்சியின் ஒற்றுமையை வலுப்படுத்தும் வகையில் அனைத்து நிர்வாகிகளையும் அரவணைத்து செல்ல வேண்டும் என்று தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளதாக எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0